குமாரோட அப்பா ஒரே குஷியா இருந்தார். அவர் பையன் வேலைக்காக வெளியூர் போகப்போறான். ஆனா அவர் மகிழ்ச்சிக்கு காரணம் அது இல்ல.. அவன் வளர்த்து வந்த பேசக்கூடிய பூனனயை எப்படியவது தலை முழுகலாமுன்னுதான். பின்ன அது அவரோட வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏத்திடுதே..
யாருக்கும் தெரியாம பூனைய கொண்டு போய் பக்கத்து தெருவில விட்டுட்டு வர்றதுக்குள்ள முழி பிதுங்கிடிச்சு..அவர் வர்றதுக்கு முன்னாடியே அது வீட்டுல இருந்தது..இதுல அடுத்த நாளு திரும்பி கொண்டு போகும்போது பொண்டாட்டிக்கிட்ட மாட்டிக்கிட்டு அசடு வழிஞ்சாறு பாருங்க. எப்படியோ பொண்டாட்டிய சமாதானபடுத்தி நாலு தெரு தள்ளி கொண்டு போய் விட்டுட்டு வந்தா திருமபவும் வீட்டுல இருக்கு..பொண்டாட்டியோட பார்வை எப்படி இருந்து இருக்கும்!!. அவமானத்தால பூனையோட கால்ல விழுந்து அடுத்த தடவை வராதன்னு கெஞ்சலாமுன்னு கூட தோனிக்சு..
அதனால அடுத்த தடவை மூத்திர சந்து நாலஞ்சி தாண்டி இப்பிடி அப்பிடின்னு சுத்தி சுத்தி எப்பிடியோ தூரமா தள்ளி போய் விட்டு விட்டுடார். வயசாயிடுச்சு பாருங்க கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு கெளம்புனாரு..
வீட்டுல இருந்த அவரோட பொண்டாட்டி அவருக்காக காபி போட்டுட்டு இருந்தாங்க.. அப்ப பார்த்து தொலைபேசி சத்தம் போட்டுது. எடுத்தா புருஷன்...
"ரொம்ப தூரம் தள்ளி வந்து விட்டுட்டேன்.. இருந்தாலும் திரும்பி வந்துடுச்சா பாரு"..புருஷன்
"இருங்க பாக்குறேன்...ஆமாங்க வந்துடிச்சு.!!"... பொண்டாட்டி
"சரி சரி.., போனை அது கிட்ட குடு." ...புருஷன்..
"ஏங்க.., அதை திட்டாதீங்க "... பொண்டாட்டி
"நீ வேற, வீட்டுக்கு வர வழி தெரியல.., அது கிட்ட கேக்கனும்..." புருஷன்.
"!!!!!!!!!!!" .......பொண்டாட்டி..